இதனால் பிரிட்டானியா நிறுவனம் தனது தலைமையகத்தை 90,000 சதுர அடியில் பெங்களூர், ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி வளாகத்திற்கு மாற்ற உள்ளது. மேலும் இந்தியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இத்தகைய பெரும் மதிப்புடைய சொத்தை ஒப்பந்தம் செய்ய பொருத்தமான நபரை கண்டறிய முடியவில்லை என நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது, கடந்த 2005ஆம் ஆண்டு இதன் லாப விகிசம் 12.3% என்று இருந்தது, ஆனால் கடந்த நிதியாண்டில் (2012) 5.3% எட்டியது. தற்போது 5.8% என்ற அளவில் உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சொத்துக்களை விற்பதன் முலம் உலகளவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விரிவுபடுத்த இந்த நிதி போதுமானதாக இருக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது.