Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னரான ராகுராம் ராஜன் அறிவித்த மானிட்டரி பாலிஸியை தொடர்ந்து, எம்எஸ்எஃப் விகிதம் குறைக்கப்பட்டது. இக்குறைப்பின் விளைவாக வங்கிகள் எம்எஸ்எஃப் முறையின் வழியாக, ரிசர்வ் விங்கியிடம் இருந்து 627.82 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுள்ளது.
ஜூலை மத்தியில் எம்எஸ்எஃப் விகிதம் 200 புள்ளிகள் உயர்த்தி 10.25 சதவிகித அளவில் வங்கிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் இம்மாத துவக்கத்தில் ராகுராம் ராஜனின் மானிட்டரி பாலிஸி அறிக்கையில் எம்எஸ்எஃப் விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.50 சதவிகிதமாக அறிவித்தது.
பொதுவாக பண இறுக்கத்தின் போது மட்டுமே எம்எஸ்எஃப் விகிதம் குறைக்கப்படும். எம்எஸ்எஃப் விகித குறைப்பினால் மக்களிடையே நிதி திட்டங்களில் முதலீடு செய்யவும், அதிக அளவில் கடன் பெறவும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary