சென்னை: 2014ஆம் ஆண்டு மார்ச் மாத கடைசிக்குள் அனைத்து பொது துறை வங்கிகளின் கிளைகளிலும் ஏ.டி.எம் மையம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்ற நிதி அமைச்சகத்தின் இலக்கை நிறைவேற்ற, பொது துறை வங்கிகள் தினமும் 137 ஏ.டி.எம் சென்டர்களை நிறுவ வேண்டியுள்ளது என்று ஊடக செய்தி அறிக்கை கூறியுள்ளது.
பண பரிமாற்றத்தை சுலபமாக்க, பொது துறை வங்கிகள் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் ஏ.டி.எம்-களை நிறுவ அரசாங்கம் வலியுறித்தியுள்ளது. "மார்ச் 31, 2014-க்குள் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளும் ஏ.டி.எம் நிறுவப்பட்டு விடும் என்று வங்கிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்" என்று கடந்த பட்ஜெட் விரிவுரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
5,726 எடிஎம்கள்!!
அமைச்சகத்தின் தகவல்படி, அனைத்து வங்கிகளும் தங்களின் இலக்கை இன்னும் எட்டவில்லை. மார்ச் கடைசிக்குள் தன்னுடைய 34,668 கிளைகளுக்கு ஏ.டி.எம்-கள் நிறுவ வேண்டிய வங்கிகள், ஆகஸ்ட் மாதம் வரை வெறும் 5,726 மையங்களையே நிறுவியுள்ளது.
26 பொதுத்துறை வங்கிகள்
இந்த நிதியாண்டில் மீதமிருக்கும் 7 மாதத்தில், 26 பொதுத்துறை வங்கிகளும் ஒட்டுமொத்தமாக இன்னும் 28,942 ஏ.டி.எம் மையங்களை நிறுவ வேண்டியுள்ளது.
நாளுக்கு 137 ஏ.டி.எம்
இந்த இலக்கை அடைய சராசரியாக ஒரு நாளைக்கு 137 ஏ.டி.எம்-களை அவர்கள் நிறுவ வேண்டியிருக்கும் என்று ஊடக அறிக்கை கூறியுள்ளது.
ஸ்டேட் வங்கி
ஆகஸ்ட் மாத இறுதியில் கணக்கிட்ட போது, இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டிற்குள் 3,339 ஏ.டி.எம்-களை நிறுவ வேண்டியுள்ளது.
பேங்க் ஆப் இந்தியா
இருப்பினும் பேங்க் ஆப் இந்தியா இன்னும் 2,586 ஏ.டி.எம்-களை மட்டுமே நிறுவ வேண்டியுள்ளது.
அலஹாபாத் வங்கி
அதே போல் அலஹாபாத் வங்கி இன்னும் 2,174 ஏ.டி.எம்-களை மட்டுமே நிறுவ வேண்டியுள்ளது என்று தகவல் அறிக்கை கூறுகிறது.