Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் சொத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையை சேர்ந்த டாடா ரியால்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ரியல் எஸ்டேட்டில் சுமார் 600 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த நிதி திரட்டும் திட்டம் அடுத்த முன்று மாதங்களில் நிறைவடையும் எனவும், இதில் திரட்டப்படும் நிதியானது வணிக வளாகம், பணியிடம், அடுக்கு மாடி கட்டிடங்களில் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இத்திட்டத்தின் முதல் சுற்றை TRIF-1 என அழைக்கப்படும், முதல் சற்றில் கிடைக்கபெறும் நிதியை புதிய திட்டங்களை உருவாக்க உதவும், மேலும் உள்நாட்டில் சொத்துகளை வாங்க திட்டமிட்டுள்ளோம்" என நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் உபேல் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார்.
இரண்டாம் சுற்றில் டாடா குழுமத்தின் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளாதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Tata Realty launches Rs 600-cr fund with Tata Asset Management
Story first published: Monday, October 21, 2013, 18:26 [IST]