சென்னை: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் மாதத்தில் மொத்த நேரடி வரி வசூல் சுமார் 13.33 சதவிதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இதனால் இந்த ஆண்டு ரூ.2.84 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டில் ரூ.2.50 லட்சம் கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது .
மேலும் நிகர நேரடி வரியும் இந்த ஏப்ரல்-அக்டோபர் மாத காலாண்டில் சுமார் 11.58 சதவிதம் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை தெரிவித்தது.
ஆனால் இந்த நிதியாண்டின் வரி வசூலின் வளர்ச்சி குறிக்கோள் 20 சதவிதமாகும். இந்த மிதமான வளர்ச்சி நாட்டின் பொருளாதார பற்றாக்குறையை பாதித்துள்ளது, இதனை ஈடுசெய்யும் வகையில் திட்டங்களை தீட்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது.
மேலும் மத்திய அரசின் இந்தி நிதியாண்டின் மொத்த நேரடி வசூலின் இலக்கு சுமார் ரூ.6.68 லட்சம் கோடியாகும்.
பத்திர பரிவர்த்தனை வரியாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலாண்டில் ரூ.2,645 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 5.67 சதவிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.