சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்குத், நுகர்வோர்கள் இதுவரை காணவியலாத, சுரங்க தொழில் ஈடுப்பட அசெம்ப்ளி ரோபோக்களை தயாரிக்க சுமார் 10.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற போட்டி நிறுவனங்களை முந்தும் நோக்கில், புதிய உற்பத்திப் பொருட்களுக்கான அடித்தளத்தை அமைப்பதில் மும்முரமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்வதின் பின்னணியில் இயங்கக்கூடிய இயந்திரங்களுக்கென அதிக அளவில் செலவு செய்து வருகிறது.
புதிய ஐபோனாகிய 5சி -யின் வண்ணமயமான பிளாஸ்டிக், லேசர் ஆகியவற்றை பாலிஷ் செய்யக்கூடிய சாதனம், மேக் புக்கின் அலுமினிய அமைப்பை செதுக்கக்கூடிய அரவை இயந்திரங்கள், ஐபோன் மற்றும் ஐபேட் கேமரா லென்ஸ்களுக்கான டெஸ்டிங் கியர் போன்றவை இந்த இயந்திரங்களுள் சில, இந்நிறுவனத்தின் மிகப் பிரத்யேகமான உற்பத்தி செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்த சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனம் இத்தாலியில் வரி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய வரி அதிகாரியிடமிருந்து சுமார் 1 பில்லியன் யூரோவுக்கு (1.34 மில்லியன் டாலர்) மேற்பட்ட தொகையை மறைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், மிலனில் (Milan) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.