சென்னை: இந்தியாவின் முதன்மை மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ், மென்பொருள் ஏற்றுமதியிலும், வாடிக்கையாளர் சேவைகளிலும், சிறந்து விளங்குகிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. எனவே இந்தியாவில் இந்நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்த ஹைதெராபாதில் மிக பெரிய விநியோக மையத்தை திறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
இது பற்றி அஜேன்திரா முகர்ஜி கூறுகையில் "டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் ஹைதெராபாத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 24,000 நபர்கள் வேலை செய்கின்றனர், இப்புதிய விநியோக மையம் 26,000 பேர் வேலை செய்ய எதுவாக 79 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதனால் அனைத்து ஊழியர்களும் ஒரே நிறுவனத்தில் ஒன்று கூடி வேலை செய்ய இக்கட்டிடம் சிறப்பாக உதவும்" என தெரிவித்தார்.
மேலும் இப்புதிய கட்டிடம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் மிக பெரிய அலுவலகமாக இருக்கும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார். நடப்பு நிதியான்டில் இதுவரை 27,000 பனியாளர் இணைந்துள்ளனர், 3ஆம் மற்றும் 4ஆம் காலாண்டில் மேலும் 23,000 பனியாளர்கள் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.