"மருத்துவ செலவுகளைப் பொருத்தவரை, ஒரு நிலையான நெறிமுறைகளை பயனீட்டாளர்களுக்கு உதவும் வண்ணம் எளிதாக்குவதோடு, சேவையை வழங்கும் நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்படாமலும் உருவாக்குவது அவசியமானதாகிறது" என்று அவ்வாணையத்தின் உறுப்பினர் (ஆயுள் அல்லாத காப்பீடுகள்) திரு எம் ராமபிரசாத் தெரிவித்தார்.
பல்வேறு நோய்களை குணப்படுத்த தேவையான செலவுகளை பொது ஆரோக்கிய கொள்கை மூலம் சமாளிக்க ஒரு தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மருத்துவக் காப்பீட்டு மாநாட்டின் பொது தெரிவித்தார்.
திரு ராம்பிரசாத் மேலும் கூறுகையில் ஆணையம் இதுபோன்ற பிரச்சனைகளை மிகவும் கவனத்தோடு ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் இதில் நல்ல பலன்களை அடைய அனைத்துத் தரப்பினரின் ஈடுபாடு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் காப்பீடு திட்டங்கள், அவற்றின் வகைகள் மற்றும் வசதிகளை கொண்டு பார்கையில் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒரு நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. எனினும் காலப்போக்கில் இதில் பல்வேறு சவால்கள் தீர்க்கப்படவேண்டி உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பயன்படுத்திக்கொள்ள மலிவான செலவிலும் தொடர்ந்தும் சேவைகளை வழங்கவேண்டிய அவசியமுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.