மும்பை: நாட்டின் நம்பிக்கை வாய்ந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் வருவாய் மதிப்பீட்டில் முதலிடம் பெற்று நாட்டின் மிகப் பெரும் நிறுவனமாக sஉருவெடுத்துள்ளது. தனியார் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
குளோபல் பிசினெஸ் இதழின் இந்தியப் பதிப்பு தயாரித்த இந்த வருடத்தின் 500 மிகப்பெரும் நிறுவங்களின் பட்டியலில், ஏறக்குறைய அனைத்து சக்தி (பெட்ரோலிய மற்றும் மின் உற்பத்தி) நிறுவனங்களும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது அறியப்பட்டுள்ளது.
லாபத்தில் முதலீடம்
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் ரூபாய் 4,75,867 கோடி ஆண்டு வருவாயுடனும், ரூபாய் 4,09,883 கோடி வருவாயுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்தன.
பாரத் பெட்ரோலியம்
இவைகளைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் ரூ2,44,822 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்தையும், ரூ2,17,772 கோடி வருவாயுடன் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நான்காவது இடத்தையும் பிடித்தன. இதனிடையே, ஆறு அரசு நிறுவனங்கள் மற்றும் நான்கு தனியார் நிறுவனங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்தன.
விற்பனையில் சரிவு
இந்த பட்டியல் விவரங்கள் படி, விற்பனை வளர்ச்சி குறைந்திருந்தாலும், லாபத்தில் முன்னேற்றம் இருந்தது. எனினும் வட்டிச் செலவுகள் வருமானத்தை சீரழிக்கும் வண்ணம் இருந்தன.
நல்ல செய்தி தான்
"இந்த விவரங்கள் இந்திய நிறுவனங்கள் தேர்ச்சியடைந்து வருவதை காட்டுவது ஒரு நல்ல செய்தியாகும். அவை திறமை மிக்க போட்டிகளினூடே செல்லத் தேவையான முயற்சிகளிலிருந்து நழுவுவதாக இல்லை. சாதகமற்ற சூழ்நிலைகளிலும் சம்பளம் மற்றும் ஊதியங்கள் உயர்ந்துள்ளன" என அந்த இதழ் தெரிவித்துள்ளது.
அரசு நிறுவனங்கள்
பட்டியலில் உள்ள பிற நிறுவனங்களுள், ஸ்டேட் வங்கி (5வது), டாட்டா மோட்டார்ஸ் (6வது), ஒஎன்ஜிசி (7வது), டாட்டா ஸ்டீல் (8வது) , எஸ்ஸார் ஆயில் (9வது) மற்றும் கோல் இந்தியா(10வது) ஆகியவை அடங்கும்.
தனியார் நிறுவனங்கள்
பாரதி ஏர்டெல் (12வது), ஐசிஐசிஐ வங்கி(14வது) என் டி பி சி (15வது), டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ் (18வது) மற்றும் இன்போசிஸ்(27வது) ஆகியவை பட்டியலில் காணப்பட்ட பிற நிறுவனங்களாகும்.
ஆச்சரியத்தக்க வகையில் சென்ற ஆண்டு முதல் எட்டு இடங்களைப் பிடித்த அதே நிறுவனங்கள் இந்த ஆண்டும் அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.