ஹைதராபாத்: உலக புகழ் பெப்சி குளிர்பான நிறுவனம் இந்த வருடம் துவக்கத்தில் இந்தியாவில் சுமார் 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக 1,200 கோடி செலவில் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் புதிதாக குளிர்பான தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினர்.
அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பெப்சி நிறுவனத்தின் சிஇஒ சிவக்குமார் கூறுகையில், இந்த தொழிற்சாலை நிறுவனத்தின் 33,000 கோடி முதலீட்டில் ஒரு பகுதியே மேலும் இதன் எங்களது உலகலாவிய சந்தையை எதிர்கொள்ள இந்தியா சரியான இடமாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் என். கிரண் ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 8,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உதவு என அவர் தெரிவித்தார்.
இந்த உலகளாவிய நிறுவனத்தின் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, ஒரு தமிழ் பெண் என்பது நமக்கும், நம் நாட்டுக்கும் பெருமை. இவர் செயல்திட்டத்தின் வலிமை மற்றும் இவரது உலகலாவிய சிந்தனை இவருக்கு இத்தகைய உயர் பதவியை அளித்துள்ளது.