டெல்லி: நம்மில் நிறைய பேர் பான் கார்டு விண்ணப்பிக்க எண்ணிக்கொண்டிருப்போம். ஆனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் முகவரி, அடையாளம் மற்றும் பிறப்புச் சான்று தொடர்பான ஒரிஜனல் ஆவனங்களை இதற்காக கொடுக்க வேண்டியிருக்கும். முன்பு நகலை மட்டும் அளித்தால் போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியின்படி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பான் கார்டு ஒதுக்கீடு செயல்முறை மாறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பு..
"ஒவ்வொரு பான் கார்டு விண்ணப்பதாரரும், தற்சான்றிடப்பட்ட அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகிய ஆவனங்களையும், மேலும் அவற்றின் அசலையும் பான் கார்டு விநியோக மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என அந்த அறிவிப்பு கூறுகிறது.
இப்போ எப்படி நடக்குது
தற்போது, பிறந்த தேதிக்கான ஆவனத்தை இணைக்கவோ அல்லது விண்ணப்பத்தின் போது அசல் ஆவனங்களை காண்பிக்கவோ தேவையில்லை.
நகலும் தேவை, அசலும் தேவை..
பிறப்புச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகிய ஆவன நகல்களை விண்ணப்பத்துடனும், ஆவன சரிபார்ப்பின்போது அசல் ஆவனங்களையும் காண்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பு தெரிவித்தது.