டெல்லி: விமானப் பெருநிறுவனங்களின் பல வருட கோரிக்கைகளையடுத்து, இந்திய வானூர்தி அமைச்சகம் ஏர்பஸ் ஏ-380 ரக மிகப் பெரிய விமானங்களை இந்தியாவின் நான்கு விமான நிலையங்களிலிருந்து இயக்க அனுமதியளித்துள்ளது.
வானூர்தி இயக்குனரகம், ஏர் இந்தியா மற்றும் வானூர்தி நிலைய நிர்வாக அமைப்பு ஆகியவைகளுக்கு இடையே பல வாரங்கள் நீடித்த ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த இரண்டடுக்கு விமானங்களை இந்தியாவில் இயக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
ஏர்பஸ் ஏ-380 சிறப்பு
ஒரு ஏர்பஸ் ஏ-380 ரக விமானம் 850 சிக்கன வகைப் பயணிகளையும், 550 முதல் 600 வரையிலான மூன்று வகுப்பு பயணிகளையும் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
போக்குவரத்து ஒப்பந்தம்
இந்த ரக விமானகளை இயக்கங்கள், விமான போக்குவரத்து பன்னாட்டு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத் தகுதி நிலைகளைப் பொருத்து அமையும் என ஒரு அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னணி நிறுவனங்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் மற்றும் லுஃப்தான்ஸா ஆகிய நிறுவனங்கள் இந்த பெரிய ரக விமானங்களை இயக்க இந்தியாவில் இயக்க அனுமதி வழங்க நிர்பந்தித்து வந்தது குறிப்பிடதக்கது.
4 விமான நிலையங்கள்
இந்த ரக விமானங்களை இயக்கத் தகுதி வாய்ந்த மற்றும் கட்டமைப்புகளைக் கொண்ட டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களுரு விமான நிலையங்களில் தற்போது இயங்க அனுமதிக்கப்படும்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த தடை நீக்கத்தால் இந்தியாவிலிருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், மேலும் பன்னாட்டு விமானங்களும் இந்தியாவிற்கு வந்து செல்லும்.