டெல்லி: டாடா மற்றும் போர்டு நிறுவனங்கள் நேற்று புதிய வகை காம்பேக்ட் செடான் வகை கார்களை அறிமுகம் செய்ததாலும், ஹுண்டாய் நிறுவனம் இந்த பட்டியலில் இன்று சேருவதாலும் இந்தியாவின் காம்பேக்ட் செடான் வகை கார்கள் விற்பனையில் கடும் போட்டி நிலவி வருகிறது, என்று பிடிஐ-ன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
டாடா நிறுவனம் பிப்ரவரி 5 முதல் 11 வரை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் போல்ட் ஹாட்ச்பேக்-உடன் செடான் ஜெஸ்ட் என்ற காம்பெக்ட் வகை காரை அறிமுகம் செய்கிறது. இந்தியாவின் முதல் காம்பேக்ட் செடான் வகையாக, ஃபிகோ வடிவத்தில் உலகளாவிய அளவில் கார்களை போர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
காம்பேக்ட் வகை கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட ஒரு மில்லியன் யூனிட்கள் அதிகரிக்கும் என்றும், இது 2018-ல் 2 மில்லியன் யூனிட்களாக இருக்கும் என்றும், போர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நைஜெல் ஹாரிஸ் குறிப்பிடுகிறார்.
ஜெஸ்ட் (Zest) வகை கார்களை மிகவும் நம்பிக்கையுடன் குறிப்பிடும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பெட்ரோலில் ஓடும் வகையில் மட்டும் கிடைத்து வரும் போல்ட் (Bolt) - உடன் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இந்த வகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனுடன் சேர்த்து, ஹுண்டாய் நிறுவனத்தால் இன்று அறிமுகப்படுத்தப்படும் ஹுண்டாய் கிராண்ட் ஐ10 (Grant i10) வகை கார்களும் காம்பேக்ட் செடான் போட்டியில் குதிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.