Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
மும்பை: இலங்கை மத்திய வங்கியுடன் கண்காணிப்பு ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பு விவர பரிமாற்றங்களுகான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ).
ஆர்பிஐ கண்காணிப்பு விவர ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தங்களை பிற நாட்டு கண்காணிப்பு அமைப்புகளுடனும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற சுமார் பத்தொன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இலங்கை மத்திய வங்கியுடனான ஒப்பந்தம் அவ்வங்கியின் நிதிக் குழு செயலர் சமரசிரி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் கோபாலகிருஷ்னா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
எனவே உலகளாவிய பணப் பரிமாற்றங்களின் மீதான கண்காணிப்பு வலுப்பெறும் என உறுதியாக நம்பலாம். இதனால் அதிகப்படியான நிதி பரிமாற்றங்களை கண்காணிக்க முடியும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary