மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அடுத்து இன்போசிஸ்!! ஐடி துறையை கலக்கும் முடிவு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி எஸ். டி. ஷிபுலாலின் பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது, இந்நிலையில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இப்பதவியில் அமர்த்தப்படுவார் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி புதனன்று கூறினார்.

தலைமை மாற்றத்தை செம்மையாக செயல்படுத்தும் வகையில், புதிய தலைமை செயலதிகாரிக்கு உதவி புரிவேன் என்றும் அதுவரை நிறுவனத்தில் தானும் பணிபுரிவேன் என்றும் நாராயணமூர்த்தி கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ- வை அந்நிறுவனம் அமைத்தது. இந்நிறுவனத்தை தொடர்ந்து இப்போது இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதில் புரட்சியை ஏற்படுத்திய இன்போசிஸ் புதிய சிஇஓவை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது.

யார் புதிய சிஇஒ

யார் புதிய சிஇஒ

இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தை அனுகியபோது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை போலவே குழப்பமான பதிலையே கூறியது. நிறுவனத்திற்கு வெளியில் இருந்து புதிய தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதை இன்போசிஸ் நிறுவனம் மறுக்காத போதிலும், அநேகமாக தற்போது அந்நிறுவனத்தில் பணிபுரியும் பி.ஜி. ஸ்ரீனிவாஸ் மற்றும் UB பிரவின் ராவ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பி.ஜி. ஸ்ரீனிவாஸ்

பி.ஜி. ஸ்ரீனிவாஸ்

ஆரம்ப அறிகுறிகளை வைத்து கணிக்கையில் தலைமைப் பதவி பி.ஜி. ஸ்ரீனிவாஸ் பக்கம் சாய்வதாகத் தொன்றுகின்றன.

சிஇஒ அவர் தான்.. அதிகாரம் என்னுடையது...

சிஇஒ அவர் தான்.. அதிகாரம் என்னுடையது...

புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கூட நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்று நாராயணமூர்த்தி கூறினார்.

ஷிபுலால்

ஷிபுலால்

ஆலோசனை (Consulting), தயாரிப்புகள் & தளங்கள் (Products & Platforms) மற்றும் ஒருங்கிணைப்பு (system integration) போன்ற பகுதிகளில் சிபுலால் தலைமையின் கீழ் இன்ஃபோசிஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

தற்போதிய நிலை

தற்போதிய நிலை

இந்த உத்தி புதிய சிஇஒ தொடந்து பணிபுரிவார் என்று கூறிய நாராயணமூர்த்தி வழுமையான பாரம்பரிய வணிகங்கள் மூலம் கிடைத்த பெரிய ஒப்பந்தங்கள் மீது நிறுவனம் கவனத்தை இழந்து விட்டதாகவும் கூறினார்.

ஆட்குறைப்பு..

ஆட்குறைப்பு..

புதிய ஒப்பந்தங்களின் நிலை கவலைகிடமாக உள்ளதால் இன்போசிஸ் நிறுவனம் ஆட்குறைப்பு திட்டத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து நாராயணமூர்த்தி கேட்டபோது அவர் ஒரே வரியில் தன் பதிலை முடித்து கொண்டார் "தகுதியானவர்களுக்கு மட்டுமே இன்போசிஸ் நிறுவனத்தில் இடம், மற்றவர்களுக்கு பை பை, ஐ எம் சாரி!!"

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Infosys CEO in saddle by March 2015: NR Narayana Murthy

Infosys chairman NR Narayana Murthy said on Wednesday that the new chief executive officer at the IT major will be in place by March 2015, once the term of SD Shibulal ends.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X