டெல்லி: தபால் நிலையங்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 0.2 சதவிதம் அதிகரிக்க நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களை குறித்து ஷியாமளா கோபிநாத் அவர்களின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் படி, நிதி அமைச்சகம் அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டி வகித்தை மாற்ற ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்புதலின் அடிப்படையில் அஞ்சலக நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் 0.2 சதவிதம் அதிகரித்தது. இந்த வட்டி அதிகரிப்பால் தபால் நிலையை வைப்பு நிதி வடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தபால் துறையில் முதலீடு அதிகரிக்கும்
இந்த வட்டி அதிகாரிப்பால் தபால் துறையில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அக்குழு தெரிவித்தது. தபால் துறை வங்கி திறப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே, இந்த அதிகப்படியான முதலீடு தபால் துறை வங்கி செயல்பட பெரிதும் உதவும் எனவும் அக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைப்பு நிதி
குறைந்த கால வைப்பு நிதிகளான 1 மற்றும் 2 ஆண்டு திட்டத்திற்கு 8.2 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான வைப்பு நிதிகளுக்கு 0.1 சதவீதம் அதிகரித்து 8.4 மற்றும் 8.5 சதவீதமாக நிர்ணயம் செய்யதுள்ளது.
ரெக்கரிங் டெபாசிட்
மக்கள் அதிகம் விரும்பும் 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு (ஆர்.டி) 8.3 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎஃப் திட்டத்தின் வட்டி வகித்தில் எந்தொரு மாற்றம் இல்லை. பிபிஎஃப் டெபாசிட் உச்சவரம்பு ஒரு லட்சம் மற்றும் வட்டி விகிதம் 8.7 சதவீதமாகவே நீடிக்கிறது.
தேசிய சேமிப்பு திட்டம் (NSE)
அதுபோல், தேசிய சேமிப்பு திட்டம் (என்எஸ்சி) மற்றும் மாதாந்திர வருவாய் திட்ட வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.