டெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்த பணி ஓய்வு நிதி அமைப்பான எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைஸேஷன் (இபிஎஃப்ஒ) மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கையை ஏற்று 2013-2014ஆம் நிதியாண்டிற்கான சேமநல நிதியின் வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்த ஒப்பதல் அளித்துள்ளது.
25 அடிப்படை புள்ளிகள் உயர்வு
கடந்த நிதியாண்டிற்கான சேமநல நிதிக்கான வட்டி வகிதம் 8.5 சதவிதமாக இருந்தது, இப்போது இதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.75 சதவிதமாக அறிவித்துள்ளது.
5 கோடி ஊழியர்கள்
இந்த வட்டி உயர்வால் 5 கோடி பேர் பலன் அடைவார்கள் என ஒய்வு ஊதிய அமைப்பு அறிவித்துள்ளது.
பங்கு சந்தையில் இபிஎஃப்ஒ
இந்நிலையில் இபிஎஃப்ஒ அமைப்பு பங்கு சந்தையில் முதலீடு செய்ய நிதி அமைச்சகத்திடம் அனுமதிக்காக மனுவை அளித்தது. இம்மனுவை ஏற்று நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
மறுப்பு
ஆனால் பல அமைப்பு இதற்கு பங்கு சந்தை நிலையற்ற வருமானத்தை அளிக்கக்கூடியவை என இந்த ஒப்புதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.