சென்னை: நமது மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்ட கனவு 2020ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக திகழ்வது தான். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியா 2023 ஆம் வருடம் தான் வல்லரசு என்ற நிலைக்கு உயரும் என் அமெரிக்காவின் ‘நைட் பிராங்' என்ற தனியார் ஆய்வு நிறுவனம் சொத்து மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையில் இந்தியாவை பற்றி குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்கார்களின் செல்வம் மற்றும் சொத்துகள் பற்றிய ஒரு மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு தற்போது முடிவுக்கு வந்தது, அதனை "2014 செல்வ செழிப்பு அறிக்கை" என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கையில் முக்கியமானவை 2023ஆம் ஆண்டில் உலகில் அதிகளவிலான பணக்காரர்கள் வசிக்கும் நாடாக இந்திய திகழும் என தெரிகிறது.
4ஆம் இடத்தில் இந்தியா
அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா அவைகளை தொடர்ந்து இந்தியா நான்காம் இடத்தில் இருக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உள்ளன.
டாப் 10 சிட்டி
டாப் 10 சிட்டி வரிசையில் 2023ஆம் ஆண்டு மும்பை இடம்பெறும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
திருட்டு, மாசு
மேலும் 2023ஆம் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் திருட்டு போன்ற குற்றங்கள், மாசு, பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தீவிரவாத செயல்கள் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்தி அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள் தொகை
அதிக மக்கள் தொகை கொண்ட நியூயார்க், லண்டன், மாஸ்கோ மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் தீவிரவாத நிகழ்வுகளுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.