டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளரை கொண்டு செயல்படும் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் நிதி திரட்டுவதற்காக சுவிஸ்ர்லாந்து சந்தையில் நிறுவன பத்திரங்களை விற்பனை செய்யதது. இந்த பத்திர விற்பனையில் சுமார் 350 மில்லயன் சுவிச்சர்லாந்து ஃப்ரான்குகளை பெற்றது, இந்நிய ரூபாய் மதிப்பில் இது 2,453.20 கோடி ரூபாய் மதிப்புடையது.
இன்றைய பண பரிமாற்றச் சந்தையில் ஒரு சுவிச்சர்லாந்து ஃப்ரான்கிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 70.24 ரூபாயாகும்.
இந்த முதலீட்டு பத்திரங்கள் ஏர்டெல் நிறுவனம், நெதர்லாந்து நாட்டில் முழுவது கைப்பற்றிய பார்தி ஏர்டெல் இன்டர்நேஷ்னல் பிவி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.
நிதி திரட்டிய ஏர்டெல்
இந்த நிதியாண்டில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் முன்று முறை வெளிநாடுகளில் நிதி திரட்ட பத்திரங்களை விற்பனை செய்துள்ளது. இதில் திரட்டபட்ட நிதி தற்போது இருக்கும் கடன்களை குறைக்க உடவும் என இந்நிறுவனம் தெரிவித்தது.
3 சதவீத வட்டி
இந்த பத்திரங்கள் 3 சதவீத வட்டி விகிதத்துடன் சுமார் 6 வருட முதிர்வு காலம் கொண்டது. முதலீட்டாளர்களுக்கும் சுமார் 2.98 சதவீத லாபத்தை அளித்தரும் என இந்நிறுவனம் தெரிவித்தது.
22 நாடுகளில் ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் உலகின் இந்தியாவை சேர்த்து சுமார் 22 நாடுகளுக்கும் மேல் பல பகுதிகளில் தனது செயல்பாட்டையும், சேவையையும் வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல சிக்கல்களுக்கும் மத்தியில் சிறப்பாக செயல்பட்டு எந்தொரு பிரச்சனையும் இல்லாமல் தனது சேவை வழங்கி வருகிறது.
பங்குகள்
பங்கு சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 295.10 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.