மும்பை: அடுத்து வரும் 5 ஆண்டுகளில் வங்கித்துறையில் சுமார் 9 முதல் 11 இலட்ச வேலைவாய்ப்பு உருவாக உள்ளதாக முன்னணி ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குருப் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் சுமார் 14000 வங்கி வாடிக்கையாளர்கள், 50,000 வங்கி ஊழியர்கள் மற்றம் இந்தியாவில் உள்ள 35 வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அறிக்கைகளிடம் நடத்தப்பட்ட சர்வேவின் மூலம் அத்தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 9 முதல் 11 இலட்ச வேலைவாய்ப்புகளில் சரி பாதி வேலைவாய்ப்பு வங்கித்துறையின் தேய்வின் காரணமாக உருவாக உள்ளதாக பாஸ்டன் கன்சல்டிங் குருப் குறிப்பிட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்டிங் குருப்
பாஸ்டன் கன்சல்டிங் குருப் நிறுவனத்தின் தகவல் படி அடுத்த 10 வருடங்களில் வங்கி துறை சுமார் 20 சதவீதம் வரை வளர உள்ளது. அந்த வளர்ச்சியை அடைய மிகப்பெரிய மக்கள் சக்தி தேவை என அறிவித்தது.
வங்கி ஊழியர்கள்
அதிகப்படியான வங்கி ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில், வங்கியியல் செயல்பாடு சற்று தேய்வுற துவங்கும், இதனை சமாளிக்கும் வகையில் புதிய ஆட்களை சேர்க்க வங்கித் துறை செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலைப்படி வங்கித்துறை சுமார் 4 இலட்ச ஊழியர்களை அமர்த்த உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் பிரதிப் சௌத்திரியிடம் கேட்டபோது "இந்த வருடம் நாங்கள் 6,000 பணியாளர்களை சேர்க்க உள்ளோம், அதற்காக அனைத்து வேலைகளும் துவங்கிவிட்டது" என அவர் தெரிவித்தார்.
ஒய்வு பெறும் ஊழியர்கள்
2017ஆம் ஆண்டு வரை பொது துறை வங்கியில் ஆட்சேர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த இடைப்பட்ட காலக்கட்டங்களில் சுமார் 1.8 இலட்ச ஊழியர்கள் ஒய்வு பெற உள்ளனர். இந்த காலியிடங்களையும் நிரப்ப பொது துறை வங்கிகள் முடிவு செய்துள்ளது.
வளர்ச்சி = ஆட்சேர்ப்பு
பொது துறை வங்கிகளின் வளரச்சியை பொருந்து 2.5 இலட்சம் முதல் 4.5 இலட்சம் வரை ஆட்சேர்ப்பு இருக்கும் என பாஸ்டன் கன்சல்டிங் குருப்