ரூ.30,000 கோடி முதலீட்டில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: இந்தியன் ஆயில்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் தனது சுத்திகரிப்பு திறனை 10 கோடி டன்னிற்கும் அதிகமாக உயர்ந்த பல கட்டங்களாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தின் முந்திரா பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் புதிய அதிநவின சுத்திகரிப்பு ஆலையை அமைக்க இந்தியன் ஆயில் கார்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

ரூ.30,000 கோடி முதலீட்டில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: இந்தியன் ஆயில்

புதிதாக அமைக்கப்படும் சுத்திகரிப்பு ஆலையின் சுத்திகரிப்புத் திறன் 1.50 கோடி டன்களாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 7 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளது. இதன் மொத்த சுத்திகரிப்பு திறன் 5.42 கோடி டன்களாகும். மோலும் இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சுத்திகரிப்பு திறன் 1.15 கோடி டன்னாக உள்ளது.

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சுமார் ரூ.56,200 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சரிபாதி பங்கினை அதாவது 27,159 கோடி ரூபாயை எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Oil Plans To Set Up Rs.30,000 Crore Refinery At Mundra

State-owned Indian Oil Corporation Ltd. (IOC) is planning to set up a Rs.30,000 crore refinery at Mundra in Gujarat as part of a plan to augment its processing capacity to 100 million tonnes.
Story first published: Tuesday, March 18, 2014, 17:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X