டெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான வரியை செலுத்த மக்களுக்கு வசதியாக வருடத்தின் கடைசி நாளான மார்ச் 29,30,31ஆம் நாட்களில் வங்கி முழுநேரமும் செயல்பட உள்ளது. இதனால் மக்கள் கடைசி நாட்களிலும் வரியை செலுத்தலாம்.
மார்ச் 29ஆம் நாள் சனிக்கிழமை (பொதுவாக அன்று வங்கி பாதி நாள் வரை மட்டும் செயல்படும்), மார்ச் 30ஆம் ஞாயிற்றுக்கிழமை (வங்கி விடுமுறை நாள்), மார்ச் 31ஆம் நாள் 2014ஆம் நிதியாண்டின் கடைசி நாள் (பெருவாரியாக அன்று அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்), ஆனால் இந்த முன்று நாட்களிளும் வங்கிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.
கலால் மற்றும் சுங்க மத்திய வாரியம்
"கலால் மற்றும் சுங்க மத்திய வாரியத்தின் தலைவர், நிதி சேவை துறையின் செயலாளரிடம் மார்ச் மாதத்தின் 29,30,31ஆம் நாள் அன்று வங்கி முழு நேரமும் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனால் நாட்டின் வருவாய் குறிப்பிட அளவு அதிகரிக்கும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
வங்கிகள்
மாதத்தின் கடைசியில் வரி வருவாய் வசூல் அதிகளவில் வரும், மேலும் ஒவ்வொரு வங்கியும் மத்திய அரசின், மின்னணு பரிமாற்ற முறையில் கட்டணத்தை செலுத்த வலியுறுத்துயுள்ளது.
மறைமுக வரி வசூல்
2014ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெடில் நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கை ரூ.45,483 கோடி குறைத்து ரூ.5.19 இலட்ச கோடியாக குறைத்துக் கொண்டது.
சுங்க வரி மற்றும் கலால் வரி
மேலும் சுங்க வரி இலக்காக 1.75 இலட்ச கோடியும், கலால் வரி இலக்காக 1.79 இலட்ச கோடியும் மற்றும் சேவை வரியாக 1.65 இலட்ச கோடி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.