டெல்லி: ரயில் பயனம் என்பது மறக்க முடியாத ஒன்று, இதே போல் ரயில் டிக்கெட் வாங்குவது என்பதும் மறக்க முடியாத ஒன்று தான் (நீண்ட வரிசையில் நின்று, அருகில் இருப்பவரிடம் சண்டையிட்டு, பல சண்டைகள் பார்க்க வேண்டிய நிலைமை... ஏன்டா பட்டரு ஏன் இவலோ கஷ்டபடுற, ஆன்லைனில் பதிவு பண்ணலாமே என்று நீங்கள் கேட்பது தெரியுது.. பட்டு வெப்ஸைட்டு ஒப்பன் பன்னாதானே பதிவு பன்றது, இங்க ஸைடே ஒன்பன் ஆகலையே)
இந்த நிலைமையில் ஐஆர்சிடிசி-யின் இ-டிக்கெட்டிங் இணையதளத்தில் ஒரே நாளில் சுமார் 5.80 டிக்கெட்கள் பதிவாகியுள்ளது. இது தான் இ-டிக்கெட்டிங் இணையதளத்தில் அதிகளவில் பதிவு செய்த எண்ணிக்கை என ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார்.
விற்பனை சூடு பிடித்துள்ளது
இதற்கு முன் கடந்த வரும் செப்டம்பர் 2ஆம் தேதி 5.72 இலட்ச டிக்கெட் பதிவு செய்ததுதான் சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து மார்ச் 19ஆம் தேதி சுமார் 5.80 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது.
வருவாய் அதிகரித்தது
மேலும் கடந்த ஆண்டு சராசரியாக தினமும் 37 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை ஆனது. நடப்பு நிதியாண்டில் சுமார் 53 கோடு ரூபாய் வரை விற்பனை அதிகரித்ததுள்ளது.
மொபைல் எஸ்எம்எஸ் சேவை
கடந்த மாதம் இறுதியில் ரயில் டிக்கெட் முன்பதிவாளர்களுக்கு, டிக்கெட்டின் நிலவரத்தை மொபைல் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் சேவையை அளிக்க தொடங்கியது.
மாற்றங்கள் தேவை
முக்கிய வழிதடங்களுக்கும் அதிகப்படியான ரயில்களும், இ-டிக்கெட் இணையதள சேவையை மேம்படுத்துவதன் மூலம் அதிகப்படியான வருவாயை இந்திய ரயில்வே ஈட்ட முடியும். (நாம சொன்ன எவங்க கேட்டபோறங்க.. இருந்தாலும் சொல்லி வைப்போம்..)