டெல்லி: நீண்ட காலமாக இந்திய வர்த்தக பாதுகாப்பு ரெகுலேட்டரான செபிக்கும், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான சகாரா நிறுவனத்திற்கு இடையை மோசடி வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் ஆஜார் ஆகமல் நிதிமன்றத்தை ஏமாற்றி வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 28 தேதி கடுமையான நெருக்கடிக்கு பின்னர் சுப்ரதா ராய் (65) போலிசாரிடம் சரணடைந்தார்.
இந்த வழக்கில் செபியின் பக்கம் நியாயம் இருந்ததால், சகாரா நிறுவனம் சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான நிதிமன்றம் திர்ப்பு அளித்தது.
20,000 கோடி நஷ்டஈடு
மேலும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய 20,000 கோடி ரூபாயை இன்னும் ஒராண்டுக்குள் சந்தை ரெகுலேட்டரான செபியிடம் டெபாசிட் செய்வதாக சகாரா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
தவணை முறை
இந்த 20,000 ரூபாயை தவணை முறையில் செலுத்த சகாரா நிறுவனம் கேட்டுகொண்டது. அதனை ஏற்ற நிதிபதிகள் 2,500 கோடி ரூபாயை இன்னும் முன்று நாட்களில் டெபாசிட் செய்யவும், மேலும் ரூ3,500 கோடி வீதம் ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள 7,000 கோடி ரூபாயை 2015 மார்ச் 31க்குள் செலுத்துவதாகவும் சகாரா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஜாமீன்
இந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் அவர்களை விடுதலை செய்ய அவரின் வழக்கறிஞர் கேட்டுகொண்டார். இதனையடுத்து கோர்ட் ஜாமீன் சுப்ரதா ராய் விடுதலை செய்ய கோர்ட் ஒப்புக் கொண்டது.
10,000 நிதி உத்தரவாதம்
சுப்ரதா ராய் அவர்களுக்கு பெயில் பெற, சகாரா நிறுவனம் 5,000 கோடி செபியிடம் டெபாசிட் செய்யவும், மேலும் ஒரு வங்கி 5,000 கோடி வரையிலான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கோர்ட் சுப்ரதா ராயிக்கு செக் வைத்தது.