பெங்களுரூ: வெயில் காலம் துவங்கியது, வெப்பத்தை தனிக்க எதையாவது நாம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் இந்த மின்சார தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
மின்சார பிரச்சனையை போக்க கர்நாடக அரசு பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தை முடக்க உத்தரவிட்டுள்ளது. கர்நாடகவில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களை அம்மாநில அரசு தாங்கள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தை நிறுத்தி மாநில தேவை பூர்த்தி செய்ய உதவுமாறு கேட்டுகொண்டுள்ளது.
மின்சார ஏற்றுமதி
மேலும் கர்நாடக அரசு நிறுவனத்தின் மின்சார ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
ஒரு யூனிட் 5.50 ரூபாய்
இவ்வாறு பெறப்படும் மினசாரத்திற்கு அதிகப்படியான தொகையை செலுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனகள் அளிக்கும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 5.50 ரூபாய் கொடுப்பதாக அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மின் பற்றாக்குறை
கர்நாடக மாநிலத்தின் தனியார் மின் ஏற்றுமதி 450 மெகா வாட், ஆனால் மாநிலத்தின் மின்சார பற்றாக்குறை 1,000 மொகவாட் ஆகும். மக்கள் மின்சாரம் இல்லமல் கஷ்டப்பட கூடாது என்று நினைக்கும் கர்நாடக அரசுக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் நிலைமை
கர்நாடகாவின் மக்கள் தொகை 6.25 கோடி தான், தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி. மக்கள் தொகை, தொழில் துறை அதிகம் கொண்ட தமிழ்நாட்டில் ஏற்கனவே தாறுமாறாக மின்தடை ஏற்படுகிறது. இன்னும் சில நாட்களில் நம் அம்மாமார்கள் மற்றும் மனைவிமார்கள் துவைத்த துணியை கரண்டு கம்பிகளின் மேல் உலர வைக்கலாம் போல..