டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வேட்பாளர்களின் வெளிநாட்டு சொத்துக்களின் விபரங்களை முறையான பத்திர வடிவில் சமர்ப்பிக்கும் மாறு தேர்தல் ஆணையம் அனைத்து தேசிய, மாநில கட்சிகளை கேட்டுகொண்டுள்ளது.
மார்ச் மாதம் 22ஆம் தேதியண்று தேர்தல் குறித்த விதிமுறைகள் அடங்கிய கடிதம் ஒன்றில் தேர்ல் ஆணையத்தின் செயலாளர் அசிஷ் சக்ரபர்தி கையெழுத்திட்டார். இதன் படி தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட துவங்கியுள்ளது.
இந்த விதிமுறைகளின் படி, வேட்பாளர்கள் தங்களின் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடுகள், வெளிநாடுகளில் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் கடன்கள் குறித்த முழு விபரங்களையும் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.