மும்பை: ரிசர்வ் வங்கி நேற்று காலையில் ரிசர்வ் புதிய பணவியல் கொள்கையை வெளியிட்டது இது வங்கிகளுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் வங்கி பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லாம்.
இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே வங்கி பங்குகள் சிறப்பாக செயல்பட துவங்கியது. இதனால் மும்பை பங்கு சந்தையில் வங்கி அளவிட்டில் 133 புள்ளிகள் உயர்ந்து 12721.90 புள்ளிகளை எட்டியது. நேற்று வர்த்தக முடிவிலும் வங்கி பங்குகள் உயர்வுடனே முடிந்தது.
நீண்ட கால முதலீட்டு
இதனால் நீண்ட கால முதலீட்டு நோக்கில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகளில் முதலீடு செய்தனர். வங்கி வட்டி வகிதங்களில் எந்த விதமான மாற்றும் இல்லாததால் வங்கி பங்குகள் பெருவாரியான அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் வங்கிகள்
தனியார் வங்கி துறையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெடிஎஃப்சி வங்கிகள் சரிவை தழுவியது, மற்ற எல்லா வங்கி பங்குகளும் உயர்ந்தது.
பொது துறை வங்கிகள்
பொது துறை வங்கிகளில் எல்லா வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா அகியவை சுமார் 35 புள்ளிகள் உயர்ந்து புத்துணர்வுடன் செயல்படுகிறது.
புதிய வங்கிகள்
புதிய வங்கிகள் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் வங்கிகள் பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
புதிய துணை கவர்னர்
ரிசர்வ் வங்கியின் தனிக் குழு புதிய துணை கவர்னருக்கான ஆறு பேர் கொண்ட பட்டியலை ஆய்வு செய்து வந்தது. இதில் இப்பட்டியல் பாங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ் முத்ரா அவர்களை இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை பற்றி அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.