மும்பை: நீண்ட எதிர்ப்பார்ப்பிற்கு பிறகு ரிசர்வ் வங்கி புதிய வங்கிகளுக்கான உரமங்கள் பெரு நிறுவனங்களை அறிவித்துள்ளது. சுமார் 27 விண்ணப்பங்களில் தற்போது கட்டுமான நிதியியல் நிறுவனமான ஐடிஎஃப்சி மற்றும் சிறுநிதியியல் நிறுவனமான பந்தன் ஆகிய இரு சிறு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வங்கிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
மேலும் பெறு நிறுவனங்களான ஏடிஏஜி குருப், ஆதித்யா பிர்லா குருப் மற்றும் பஜாஜ் குருப் நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய தபால் துறையின் நிலை??
இந்திய தபால் துறையும் வங்கியினை திறக்க விண்ணப்பம் சமர்ப்பித்தது, இவ்விண்ணப்பதை பரிசீலனை செய்த ரிசர்வ் வங்கி மத்திய அரசின் ஒப்புதலுக்காக தபால் துறையின் விண்ணப்பத்தை நிலுவையில் வைத்துள்ளது.
ஏமாற்றம் அடைந்த பெறு நிறுவனங்கள்
மற்ற நிறுவனங்களை ரிசர்வ் வங்கியின் புதிய வேண்டுகோளிற்கு இயணங்க மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்மாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அனுமதி பெறதா நிறுவனங்களில் ரிலையன்ஸ் கேப்பிடல் மற்றும் எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனமும் உண்டு.
18 மாதங்கள் கெடு
அனுமதி பெற்ற நிறுவனங்கள் உள்-கொள்கை திட்டத்தின் படி 18 மாதத்திற்குள் வங்கிகள் செயல்பட முழு கட்டமைப்பு செயல்படுத்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பங்கு
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற அடுத்த நாளில் புதிய வங்கிகளுக்கான உரிமத்தை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. நிதியமைச்சர் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் தேவையற்றது என்று கூறியும் ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பிறகே அறிவித்தது குறிப்பிடதக்கது.
வங்கித்துறையில் ஒரு மையில் கல்
இந்த நிகழ்விற்காக நாங்கள் நீண்ட நாட்களாக காத்து கொண்டு இருந்தோம், இந்திய வங்கித்துறையில் இது ஒரு மையில் கல். இந்த முயற்சியின் மூலம் வங்கித்துறை புதிய உயரங்களை அடையும் என இந்திய நிதி சேவைகள் செயலாளர் ஜி.எஸ். சந்து தெரிவித்தார்.
பந்தன் நிதியியல் நிறுவனம்
சிறு நிதியியல் நிறுவனங்களில் முதல் முறையில் ஒரு வங்கி துவங்குவது பந்தன் நிதியியல் நிறுவனம் தான் இது இந்நிறுவனத்திற்கு பெருமை. இந்நிறுவனம் இந்தியாவின் வங்கி சேவை பெறாக சிறு நகரங்களில் செயல்பட போவதாக தெரிவித்துள்ளது.