இந்திய வங்கிகளில் வைப்பு தொகை 14.6% உயர்வு: ரிசர்வ் வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் வைப்பு தொகை கடந்த வருடத்தை விட 14.64 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த உயர்வினால் சுமார் 7,739,387 கோடி ரூபாய் இந்திய வங்கிகளில் வைப்பு தொகையாக உள்ளது. கடந்த வருடம் இந்த அளவீடு 6,750,454 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

இதற்கு மாறாக வங்கி கடன் தொகை இந்த வருடம் 14.31 உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. கடந்த வருடம் 5,260,459 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை 2014ஆம் நிதியாண்டில் 6,013,085 கோடியாக உயர்ந்தது.

இந்திய வங்கிகளில் வைப்பு தொகை 14.6% உயர்வு: ரிசர்வ் வங்கி

மேலும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளில் 14 சதவீதம் வைப்பு இருக்கும் தருவாயில் கடன் அளவு 15 சதவீதம் வரை உயரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நிரந்த வைப்பு நிதியில் 15.28 சதவீதம் உயர்ந்து 7,018,585 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் 6,088,155 கோடியாக இருந்தது.

மேலும் டிமாண்டு வைப்பு நிதியில் வைப்பு தொகை 8.83 சதவீதமாக உயர்ந்து 7,20,800 கோடியாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் இதே காலகட்டத்தில் 6,62,299 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank credit grows by 14.3%; deposits up 14.6% till Mar 21

Bank deposits grew by 14.64 percent year-on-year to Rs 7,739,387 crore as on March 21, higher than credit growth, according to the RBI data.
Story first published: Friday, April 4, 2014, 15:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X