மும்பை: இன்று காலை ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் வைப்பு தொகை கடந்த வருடத்தை விட 14.64 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த உயர்வினால் சுமார் 7,739,387 கோடி ரூபாய் இந்திய வங்கிகளில் வைப்பு தொகையாக உள்ளது. கடந்த வருடம் இந்த அளவீடு 6,750,454 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
இதற்கு மாறாக வங்கி கடன் தொகை இந்த வருடம் 14.31 உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. கடந்த வருடம் 5,260,459 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை 2014ஆம் நிதியாண்டில் 6,013,085 கோடியாக உயர்ந்தது.
மேலும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளில் 14 சதவீதம் வைப்பு இருக்கும் தருவாயில் கடன் அளவு 15 சதவீதம் வரை உயரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நிரந்த வைப்பு நிதியில் 15.28 சதவீதம் உயர்ந்து 7,018,585 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் 6,088,155 கோடியாக இருந்தது.
மேலும் டிமாண்டு வைப்பு நிதியில் வைப்பு தொகை 8.83 சதவீதமாக உயர்ந்து 7,20,800 கோடியாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் இதே காலகட்டத்தில் 6,62,299 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.