மும்பை: கடந்த புதனன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, 25 போட்டியாளர்களுக்கிடையே 2 நிறுவனங்களுக்கு மட்டும் புதிய வங்கி துவங்குவதற்கான உரிமத்தை வழங்கியது. மேலும் இந்த போட்டியில் முன்னணி கார்பரேட் குழுமங்களை ஆர்பிஐ புறக்கணித்துள்ளது இரண்டு சிறிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இரு உரிமங்களில் ஒன்று இன்ப்ராஸ்ட்ரக்சர் நிதி நிறுவனமான ஐடிஎஃப்சிக்கும் மற்றொன்று சிறிய அளவிலேயே அறியப்பட்டு கொல்கத்தாவை தலைமையாக கொண்டு செயல்படும் பந்தன் பினான்சியல் சர்வீஸ் என்ற சிறுகடன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் செயல்பட்டு வரும் பந்தன் இந்தியாவின் மிக பெரிய சிறு கடன் வழங்கும் நிறுவனமாகும்.
சந்திர சேகர் கோஷ்
கொல்கத்தாவை சேர்ந்த பந்தன் நிறுவனம் சந்திர சேகர் கோஷ் என்பவரால் 2001 -ல் சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் பொருளாதார சுரண்டப்படும் பெண்களுக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்று அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 இலட்ச வாடிக்கையாளர்
ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ள இந்நிறுவனம் ஆசா-வை மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 2006 -ல் வங்கி சாரா நிதி நிறுவனம் என்ற அந்தஸ்தை ஆர்பிஐ - யிடமிருந்து பெற்றது. தற்போது 52 லட்சம் கடன் பெறுபவர்களை கொண்டு செயல்பட்டு வரும் பெருமையை பெற்றுள்ளது.
முழு நேர வங்கி
பந்தன், சுய உதவி குழுவின் உறுப்பினர்கள் மட்டுமே கடன் பெற முடியும் என்பதை வலியுறுத்தி வருகிறது. சந்திர சேகர் கோஷ் , இந்த சிறு கடன் நிறுவனத்தை முழு நேர வங்கியாக உருவெடுக்க வைக்க இதுவே சரியான தருணம் என்று உணர்ந்த 2009 -ல் இது மற்ற மாநிலங்களுக்கும் தனது சேவையை விரிவாக்கம் செய்தது.
கடுமம் போட்டியில் வெற்றி
இதற்கான தனது வரவேற்பை 2012 -ல் மத்திய வங்கி வழங்கிய போது, பல போட்டியாளர்களுக்கு மத்தியில் பந்தன் முதல் நிறுவனமாக தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தது
பூர்வீகம்
இவரின் தந்தை சதாரணமான இனிப்பு பணடங்கள் வியாபாரி என்பது வியப்புக்குரிய விஷயம்.