மும்பை: இந்திய வர்த்தக துறையில் ஆன்லைன் வர்த்தக துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த பத்து மாதங்களாக இந்த ஆன்லை வர்த்தகத்தில் அனல் பரக்கிறது. இதற்கான காரணம் அமேசான் நிறுவனம் தான்.
இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட் நிறுவனம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மேலும் இந்நிறுவனம் ஆடை வர்த்தக நிறுவனமான மன்திரா நிறுவனத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அதேபோல் இபே நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
10 மாத செயல்பாடு
ஆன்லைன் வர்த்தகத்திற்கு கிடைத்த அரசு திட்டங்களாலும், அதிகப்படியான அன்னிய முதலீட்டின் காரணமாக உலகின் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான அமேசான் நிறுவனம் இந்தியாவில் செயல்பட துவங்கியுள்ளது. இந்தியாவில் செயல்பட துவங்கிய 10 மாதங்களில் அமேசான் நிறுவனம் அனைத்து நிறுவனங்களுக்கும் போட்டியாக திகழ்கிறது.
பிலிப்கார்ட்
பிலிப்கார்ட் நிறுவனத்தின் இரண்டு நிறுவனர்களும் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் அமேசான் நிறுவனத்தை விட்டு விலகி பிலிப்கார்ட் நிறுவனத்தை துவங்கினர்.
ஈ-காமர்ஸ்
இந்த ஈ-காமர்ஸ் நிறுவனம் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுமே ஆன்லைன் மூலம் விற்கின்றனர். அதேபோல் மக்கள் வாங்கிய பொருட்களை ஒரே நாளில் விநியோகம் போன்ற பல வகையான சேவைகள் வழங்கப்படுகிறது.
சிறு விற்பனையாளர்
இந்த ஆன்லைன் வர்த்தகம் வந்த பின்னர் சிறு வியாபாரிகள் கூட தங்களின் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தளத்தை அமைத்து தருகின்றனர்.
அமேசான்
அமேசான் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் 150 இலட்ச பொருட்களை 20 வகை பிரிவுகளில் விற்கின்றனர். இந்த உயரத்தை எட்ட பிலிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனத்திற்கு குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் ஆகலாம் என அமேசான் நிறுவனத்தின் இந்தியா கிளை பிரிவின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்தார்.