மும்பை: இந்திய முதலீட்டு சந்தையில் கடந்த நான்கு மாதங்களாக அன்னிய முதலீடு அதிகளவில் குவிந்துள்ளது. 2014ஆம் நிதியாண்டில் மார்ச் 28 ஆம் நாளில் முடிவடைந்த காலகட்டங்களில் நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக இந்திய பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகப்படியாக முதலீடு செய்துள்ளனர்.
அன்னிய முதலீடு உயர்வு
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அன்னிய முதலீடு 5.04 பில்லியன் டாலர் அதிகரித்து 303.67 பில்லியன் டாலராக உயர்ந்ததாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இது கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
298.64 பில்லியன் டாலர்
மார்ச் 21 நாள் முடிவில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு 298.64 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தது.
நாணய இருப்பு
மேலும் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் டாலர் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்றவற்றை கணக்கிடுகையில் அன்னிய முதலீடு 5.01 பில்லியன் டாலர் அதிகரித்து 276.41 பில்லியன் டாலர் அதிகரித்ததுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
தங்க இருப்பு
அன்னிய முதலீட்டில் வெளிநாட்டு நாணயம் பெரும் பகுதியை வகுக்கிறது. மேலும் மார்ச் 28ஆம் நாள் முடிவில் தங்க இருப்பில் 20.97 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இந்திய கருவுலத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.