பெங்களுரூ: இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களில் பல உயர் அதிகாரிகள் வெளியேறினர். இதனால் இந்நிறுவனத்தின் பெயர் செய்திகளில் அதிகளவில் தென்பட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஷிபுலால் தனது பணிகாலம் முடிந்தது நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.
இவரின் பணியிடத்தை நிரப்ப இன்போசிஸ் நிறுவனம் தனது தேடுதல் வேட்டையை துவங்கியதாக இன்று தனது செய்தி அறிக்கையில் தெரிவிக்கிறது.
ஷிபுலால்
ஷிபுலால் வரும் ஜனவரி 9, 2015ஆம் ஆண்டு அன்று நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். இன்போசிஸ் நிறுவனம் இவரின் பணியிடத்தை நிரப்ப ஒரு சிறப்பு குழுவை அமைத்து தனது தேடுதல் வேட்டையை தெடங்கியுள்ளது.
சிறப்பு குழு
இந்த சிறப்புக்குழு டெவல்ப்மென்டு டைய்மென்ஷன்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய சிஇஓ-வை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் தற்போது நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறது, இதனால் புதிய சிஇஓ அவர்களுக்கு அதிகபடியான பொருப்புகள் இருக்கும்.
தேடல் நிறுவனம்
மேலும் இந்த குழுவிற்கு இகன் ஜென்டர் என்னும் நிர்வாகி தேடல் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.
புதிய சிஇஒ
இதுவரை சிஇஓ பதவியில் இந்நிறுவனர்கள் தான் பதவியில் நாராயன மூர்த்தி, நந்தன் நிலக்கோனி, கிரிஸ் கோபால கிருஷனன் மற்றும் ஷிபுலால் அகியோர் மட்டுமே இருந்தனர். தற்போது இந்நிறுவனத்தின் நிறுவனர் அல்லாத புதிய ஒருவர் சிஇஓ அவர்கள் பதவிக்கு வருவார்.