டெல்லி: இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது, இதனால் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த முன்று மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்நிலை மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
இந்தியாவில் முக்கிய விவசாய பகுதிகளில் குறைவான அளவே மழை பதிவாகியுள்ளதால் உணவு பணவீக்கம் தாறுமாறாக உள்ளது என சில தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஆசியாவில் முன்றாவது பொருளாதார நாடான இந்தியா இந்நிலைக்கு தள்ளப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.
மேலும் இந்தியாவில் கடந்த மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.30 சதவீதமாக இருந்தது, பிப்ரவரி மாதம் 4.68 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. நுகர்வோர் பணவீக்கமும் 8.19 சதவீதமாக குறைந்தது.