டெல்லி: 20,000 கோடி ரூபாய் மோசடிக்காக சாகார நிறுவனத்தின் நிறுவனரான சுப்ரதா ராய் மற்றும் இரு நிர்வாகிகளை மார்ச் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்களுடனான விசரானையில் 20,000 கோடி ரூபாயை இன்னும் 18 மாதங்களில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் ஒப்படைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுப்ரதா ராய் மற்றும் இரு நிர்வாகிகளுக்கு ஜாமீன் பெற நிதிபதி கே.எஸ் ராதாகிருஷ்னன் மற்றும் கேக்கர் மனுவை அளித்தனர். இதற்கு மனுவை விசாரித்த அவர்கள் ரொக்கமாக 5000 கோடியும், வங்கி உத்திரவாதமாக 5000 கோடி செலுத்திவிட்டு ஜாமீன் பெறுமாறு உத்தரவிட்டனர்.
தவணை முறைக்கு நிதிமன்றம் ஒப்புதல்
பல மனுக்களுக்கு பின்பு ராதாகிருஷ்னன் தலைமையிலான பென்ச் 2,500 கோடியை இன்னும் நான்கு நாட்களிலும், அடுத்த 60 நாட்களில் 2,500 கோடி ரூபாய் செலுத்துவதாக, மேலும் அடுத்த 90 நாட்களில் வங்கி உத்தரவாதமான 5000 கோடியை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
ஜாமீன்
இந்த ஜாமீனில் சுப்ரதா ராய், ரவி சங்கர் துபே மற்றும் அசோக் ராய் செவுதிரி ஆகிய முவரும் அடக்கம்.
ஒரே தவனையாக 10,000 கோடி ரூபாய்
இதற்கு முன்பு நிதிமன்றம் ஒரே தவணையாக 5000 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 5000 கோடி ரூபாய் வங்கி உறுதி தொகையாகவும் அளிக்க உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.
அவமானம்
நிதிமன்ற விசாரனைக்கு சுப்ரதா ராய் அழைத்து வரும்போது அவர் மீது ஒரு மையை தெளித்து, மானபங்கபடுத்தியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.
முவர்
முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 20,000 ரூபாய் மோசடியில் சுப்ரதா ராய், ரவி சங்கர் துபே மற்றும் அசோக் ராய் செவுதிரி ஆகிய முவரும் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்றனர்.
ராம் ஜித்மலானி
சுப்ரதா ராய் தரப்பில் இந்தியாவின் முக்கியமான மற்றும் பிரபலமான வழக்கறிஞரான ராம் ஜித்மலானி தலைமையிலான குழு உள்ளது. இதனால் நிதிபதிகள் சற்று நிதனமாற்ற நிலையிலே உள்ளனர்.