டெல்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பார் முகேஷ் அம்பானி என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இவருக்கு ஆகாஷ், அனந்து ஆகிய இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஈஷா ஆகியோர் ஆவார். ஆகாஷ் தனது படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையை போலவே ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்தார். அதேபோல் அவரது மகளும் படிப்பை முடித்துவட்டி நிறுவனத்தின் இணைவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த நிலை தற்போது மாறியது.
ஈஷா தற்போது படிப்பை முடித்து வட்ட நிலையில் நிறுவன பதவியை புறக்கணித்து விட்டு அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி நிறுவனத்தில் பணியாளராக சேர்ந்துள்ளார்.
ஈஷா அம்பானி
ஈஷா அம்பானி சவுத் ஆசியன் ஸ்டெடீஸ் மற்றும் உளவியல் துறையில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்களகத்தில் பட்டம் பெற்றுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தில் மிகவும் முக்கிய பொறுப்பில் அமர இருக்கும் இவருக்கு சில முக்கிய பயிற்சிகள் தேவையின் காரணமாக மெக்கென்சி நிறுவனத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஆகாஷ், அனந்து அம்பானி
முகேஷ் அம்பானியின் முத்த மகன் ஆகாஷ் அம்பானி இவர் தனது படிப்பை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகளத்தில் முடித்துவிட்டு ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் உயர்மட்டக் குழுவில் பணியாற்றி வருகிறா்ர். இவரது இளைய மகனான அனந்து அம்பானி தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
முன் அனுபவம்
இத்தகைய முறையை இவர் மட்டும் அல்லாமல் பலபேர் கையாண்டு உள்ளனர். பிரமல் நிறுவனத்தின் நிறுவனரான அஜய் பிரமலின் மகள் நந்தினி பிரமல் மெக்கென்சி நிறுவனத்தின் பணியாற்றினார், அதேபோல் விப்ரோ ஆசிம் பிரேம்ஜி மகன், ஏர்டெல் சுனில் மிட்டலின் மகன் அகியோரும் இத்தகைய முறையை கையான்டுள்ளனர்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
இதன் மூலம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கூடிய விரைலில் முகேஷ் அம்பானியின் அடுத்த தலைமுறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது.