மும்பை: இந்தியாவின் ஈ-காமர்ஸ் துறை பற்றி அவ்வபோது சில முக்கிய செய்திகள் வருவது வழக்கம். தற்போது இத்துறை மத்திய அரசின் தீவிர கண்காணிப்பில் உள்ளது குறிப்பாக இத்துறை நிறுவனங்களின் வர்த்தக முறையை பற்றி முக்கிய வசாரணைகளும் நடந்து வருகிறது.
இந்த 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈகாமர்ஸ் துறையில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. இன்றளவில் இத்தளம் இந்தியாவின் நடுத்தர மக்களின் காம உணர்வுகளையும், இச்சைகளையும் திர்த்துக்கொள்ளும் தளமாக மாறிவருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இதற்கென தனி நிறுவனங்கள்
காமசூத்ரா, தட்ஸ்பர்சனல், ஒமைசிக்ரட்ஸ்,ஒஎம்பேஷ்ரம் போன்ற பல நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் களமிறங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற பெரு நிறுவனங்களுடனான கூட்டணியில் செயல்பட்டு வருகிறது.
இப்படி எல்லாம் இருக்கா!!
இத்தகைய நிறுவனங்களின் சில முக்கிய பொருட்களான வெண்ணிலா கான்டம், பெண்களின் உள்ளாடை போன்ற சாக்லெட்கள்(edible lingerie), விளையாட்டு பொம்மைகள் (குறிப்பு: அந்த விளையாட்டு), தளத்திற்கு தகுந்த உடைகள், கிரிம், லோஷன் மேலும் பல ஐடங்கள் உட்பட படு ஜோராக விற்பனை ஆகிறதாம்.
டார்கெட்
இத்தகைய நிறுவனங்கள் 18 வயது முதல் 65 வயதுள்ள மக்களை குறிவைத்து விற்பனை செய்கிறது. குறிப்பார இந்த வயது விபரங்களை பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் இருந்து இந்நிறுவனங்கள பெறுகின்றன.
புது பர்னிச்சர்
அடுத்த ஆறு மாதங்களில் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் செக்ஸ் பர்னிச்சர் மற்றும் எல்க்டிரானிக் டாஸ் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய ஒமைசிக்ரட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் நிறுவனர் வினோத் ரெட்டி தெரிவித்தார்.
இதுலையும் டெக்னாலஜி
மேலும் அவர் முக்கியமான தகவலை தெரிவித்தார் இந்த எல்க்டிரானிக் டாஸ்களை ஆண் பெண்களுடன் பேசும் போது லவ் ஆஃப் மூலம் புலுடூத் வழியாக ஆக்டிவேட் செய்து விடுமாம். (கேட்கவே குஜல்டியா இருக்க)
விற்பனை வளரச்சி
ஒவ்வொரு மாதமும் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது என அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அபரிதமான வளர்ச்சிக்கு எல்லாமே டிவி, சினிமா மற்றும் இண்டர்நெட் தான் காரணம் என ஐஎம்பேஷ்ரம் (imbesharm.com) நிறுவனத்தின் சிஓஓ தெரிவித்தார்.
சிறு மற்றும் குறு நகரங்கள்
இத்தகைய பொருட்களின் விற்பனை இரண்டாம் மற்றும் முன்றாம் கட்ட நகரங்களில் தான் அதிகளவில் இருக்கிறது. மொத்த விற்பனையில் சுமார் 60 சதவீத விற்பனை இத்தகைய ஊர்களில் இருந்து மட்டும் கிடைக்கிறது என காமசூத்ரா நிறுவன அதிகாரி தெரிவித்தார். (இவர்களுக்கு வேற வழி இல்லையே.. கடையில போய் கேட்ட கேவலமா பாப்பாங்க, இதுக்கு ஆன்லைன்ல பட்டன தட்டுனா விடு தேடி வருகிறது)
விற்பனையில் கலக்கும் சில ஊர்கள்
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கர்நாடகாவில் தும்கூர், ஆந்திர பிரதேசத்தில் வாரங்கள் போன்ற மாவட்டங்களில் விற்பனை அதிகளவில் உள்ளதாக இந்த நிறுவனங்கள தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொருவரின் பில்லும் குறைந்தது 4000 முதல் 5000 வரை இருக்கிறது. (அட கொன்னியா!!)
தட்ஸ்ப்ரசனல் நிறுவனர் பற்றிய ஒரு ரகசியம்
இவர் பெயர் சமிர் சாரியா இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயரிய பதவில் இருந்தவர், இவர் அந்த வேலையை விட்டு இப்ப இந்த வேலையை செய்கிறார்.
கூரியார் மேட்டர்
நாம் வாங்கும் பொருள் மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அசிங்கமாகி விடுமோ என்று நீங்கள் கவலை பட தேவையில்லை. பார்சலில் இது குறித்து எந்த வகையான தகவலும் இருக்காது. பெட்டியில் கூட நிறுவனத்தின் பெயர் இருக்காது. இத்தகைய பார்சலுக்கு பெயர் தான் "பிலக் பாக்ஸ்".
- பங்கு சந்தையில் தொடர்ந்து பணம் இழக்கிறீர்களா.. இந்த 10 தவறை ஒருபோதும் செய்யாதீங்க!
- Windfall TAX: சத்தமில்லாமல் வரியை ரத்து செய்த அரசு.. யாருக்கெல்லாம் லாபம்..?!
- பணவீக்கம் தான் RBI-க்கு பெரிய தலைவலி.. சக்திகாந்த தாஸ் பரபர கருத்து!
- UAE-யில் கொடி கட்டிப் பறக்கும் கேரள பணக்காரர்.. யார் இந்த ஆசாத் மூப்பன்..!