பெங்களுரூ: கடந்த 5 வருடங்களில் இந்தியாவில் ஆன்லைன் சில்லரை வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதில் சில நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கும் நிலையில் உள்ள, இருப்பினும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் சில நிறுவனங்கள் முடங்கியும் உள்ளது.
இந்த போட்டி நிறைந்த இச்சந்தையில் வாடிக்கையாளர் பயனளிக்கும் வகையில் சில முக்கிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்.
புதிய சேவை
வாடிக்கையாளர் இந்நிறுவன இணையதளத்தில் எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் ஒரே நாளில் டெலிவரி செய்ய இந்நிறுவனம் முற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை அடைய இத்திட்டம் உதவும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டி.. இலக்கு..
இச்சந்தையில் போட்டி மிகவும் அதிகமாக உள்ள நிலையில் இந்த சேவையின் சந்தையில் முதல் இடத்தை தக்கவைத்து கொள்ள இந்நிறுவனம் முடிவு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை 1 பில்லியன் டாலரை அடைய இத்திட்டம் மிகவும் சிறப்பாக அமையும் என இச்சந்தைய வல்லுனர்கள் தெரிவித்தனர்.
ஒரு நாளில் டெலிவரி
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது சுலபமான விஷயம் இல்லை, மிகவும் கடினமான விஷயம். இத்தகைய திட்டத்தை கையில் எடுத்துள்ள ஃபிலிப்கார்ட் நிறுவனம் இத்துறையில் ஜாம்பவான் என கருதப்படும் அமேசான் நிறுவனத்திற்கு இக்கட்டான சூழ்நிலையை அளித்துள்ளது.
4 நிறுவனங்கள்
இச்சந்தையில் பல நிறுவனங்கள் இருப்பினும் ஃபிலிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் மற்றும் இபே போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் உண்மையான போட்டி ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே தான்.
10 மாவட்டங்கள், அதிகமான கட்டணம்
இந்த சேவையை பெங்களுரூ, டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, குர்கான், மானேசர், நவி மும்பை, தானே மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒரு டெலிவரி திட்டத்திற்கு 200 ரூ கட்டணத்தை வதித்துள்ளது.