மும்பை: சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் புதிய விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால் 76 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் தற்போது முற்றிலும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு செபி சில முக்கிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் பங்கு சந்தை முற்றிலுமாக முடப்படும் எனவும் தெரிவித்தது.
புதிய விதிமுறை!!
இந்தியாவில் செயல்படும் பங்கு சந்தையின் நிகர சொத்து மதிப்பு ரூ.100 கோடியாகவும், ஆண்டு வர்த்தகம் ரூ.1000 கோடியாகவும் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை செபி பிறப்பித்தது. இதில் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்சின் ஆண்டு வர்த்தகம் ரூ.1000 கோடியை எட்டமுடியாத நிலையில் உள்ளது. இதனால் எம்எஸ்சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்சை முழுவதுமாக முட செபி திட்டமிட்டுள்ளது.
காலக்கெடு
இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த செபி வரும் 30ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது குறிப்பிடதக்கது. மேலும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் இந்த விதிமுறையை தளர்த்த செபிக்கு கோரிக்கை விடுத்திருந்தது, ஆனால் இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
வேலை சுமை
பல தரப்பட்ட சந்தைகள் செயல்படுவதால் செபிக்கு வேலை சுமை அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து தரப்பட்ட வர்த்தகத்தையும் ஒரே கூறைக்குள் கொண்ட வர திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் படி தான் இது.
கூட்டணி
மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் இந்த வர்த்தகத்தை முடக்காமல் மற்ற பங்கு சந்தையுடன் இணைந்து செயல் பட ஒரு புதிய செயல் முறையை படிவுத்தை தயார் நிலையில் வைத்துள்ளது. அனைத்து கதவுகளும் முடப்படும் நிலை இதை செயல்படு மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்ஜேஞ்ச் முடிவு செய்துள்ளது.