கனடா: இன்போசிஸ் நிறுவனம் என்றால் நம் நினைவிற்கு வருவது நாராயணமூர்த்தி தான். இன்போசிஸ் நிறுவனத்தில் இவர் செய்த சிறப்பான செயற்பாட்டு காரணமாக சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.
ஐடி துறையில் இவரின் சிறப்புமிக்க தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை பாராட்டி கனடா இந்தியா பவுன்டேஷன் இவருக்கு "சந்ச்சழனி குளோபல் இந்தியன்" என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.
நாராயணமூர்த்திக்கு இந்த சிறப்புமிக்க விருதை கனடாவின் நிதியமைச்சர் ஜோயி ஒலிவர் கனடா இந்தியா பவுன்டேஷன் நடத்திய விழாவில் வழங்கினார். இதில் இவருக்கு கோப்பையும், ரொக்கமாக 50,000 டாலரும் கொடுக்கப்பட்டது.
இந்த விழாவில் கனடா நாட்டின் பல அரசு அதிகாரிகளும், கனடாவில் பணிபுரியும் இந்திய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் நாராயணமூர்த்தியின் வேலையை மிகவும் வெளிப்படையாக பாராட்டினர்.