டெல்லி: உலகளவில் மொபைல் போன் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கு சாம்சாங் நிறுவனம் 2014ஆம் ஆண்டு துவக்கம் முதல் சுமார் 89 மில்லியன் மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இதனால் விற்பனை விகிதம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்தது.
ஆனால் சாம்சாங் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம் பெரும் அளவில் குறைந்ததாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவத்துள்ளது.
சாம்சாங்
சாம்சாங் நிறுவனம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்துடனான காப்புரிமை பிரச்சனையில் ஆப்பிள் வென்றது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அன்று முதல் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வருடம் 32.4 சதவீதமாக இருக்கும் இதன் சந்தை மதிப்பு 31.2 சதவீதமாக குறைந்தது.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் சமிபத்திய வெளியீடான ஐபோன் 5எஸ், ஐபோன் 5சி மற்றும் ஐபேட் ஃப்ரோ ஏர் ஆகியவற்றின் அதிகப்படியான விலையினால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மிகவும் குறைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 17.5 சதவீதத்தில் இருந்து 15.3 சதவீதமாக குறைந்துள்ளது.
ஹவாய்
ஹவாய் மற்றும் லெனோவோ ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் தான் உயர்வை கண்டுள்ளது. அடத்த 2 வருடங்களுக்கு லெனோவோ நிறுவனத்தின் தயாரிப்புகளின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்ப்பார்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் சந்தை
மொபைல் மற்றும் மொபைல் சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் ஸ்மார்ட்போன்களின் வர்த்தகம் தனிபட்ட சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இதற்கான மென்பொருள் சந்தையும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.