டெல்லி: இந்திய தொலைதொடர்பு துறையில் முதன்மை நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 89 சதவீதம் உயர்ந்து 9.62 பில்லியன் ரூபாயை தொட்டது. இந்நிறுவனம் தொலைதொடர்பு சேவையில் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக ஏர்டெல் உள்ளது.
இந்நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இந்தியா மட்டும் இல்லைமால் உலகின் 20 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சிறப்பான வளர்ச்சி
இந்நிறுவனம் கடந்த இரு நிதியாண்டுகளாக தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் லாபம், உலக நாடுகளில் வளர்ச்சி, போட்டி நிறுவனங்களை வெற்றிக்கொள்ளுதல் என பல உயரங்களை தொட்டது.
லாபம்
இந்நிறுவனம் கடந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் 5.09 பில்லியன் ரூபாய் லாபமாக பெற்றது இந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 9.62 பில்லியன் பெற்றது குறிப்பிடதக்கது.