மும்பை: இந்தியாவில் அக்ஷய திரிதியை முன்னிட்டு அனைவரும் மே2 ஆம் தேதியன்று, குறைந்தது ஒரு கிராம் தங்க வேண்டும் என்று மக்கள் நகை கடைகள் மற்றும் வங்கிகளில் முந்தியடிக்கும் வேலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும் ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(GJEPC) ஒரு முக்கிய தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தங்க, வைரம் மற்றும் கற்கள் பொறிக்கப்பட்ட நகைகளின் அளவு 11 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் GJEPC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வைரக் கற்களின் ஏற்றுமதி அதிகரிப்பு
நகைகள் ஏற்றுமதி குறைந்தாலும் பாலிஷ் செய்யப்பட்ட வைரக்கற்களின் ஏற்றுமதி கடந்த வருடத்தை விட 12.64 சதவீதம் உயர்ந்து 19 பில்லியன் டாலர் அளவு வர்த்தகத்தை தொட்டது, அதேபோல் பாலிஷ் செய்யப்படாத வைரக்கற்களின் ஏற்றுமதி 11.98 சதவீதம் உயர்ந்தது.
பாதிப்பு
இத்தகைய விழ்ச்சியினால் ஒட்டுமொத்த நகை மற்றும் தங்க கட்டிகளின் ஏற்றுமதியில் 39.50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.
அக்ஷய திரித்தி
அக்ஷய திரிதியை முன்னிட்டு இந்தியாவில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 4 ரூபாய் உயர்ந்து 2814.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள பெருநகரங்களின் தங்க விலையை இப்போது பார்போம். 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,060
பெங்களுரூ
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,040
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,120
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,020
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,140
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,040