டெல்லி: சுவிசர்லாந்து நாட்டில் இருக்கும் ஹெச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் இந்தியர்களின் கணக்கு பெருமளவில் இருப்பதாக மத்திய அரசிற்கு தகவல் கிடைத்ததுள்ளது. இத்தகைய கருப்பு பணம் நாட்டின் வரி வருமானத்தை பெருமளவில் குறைக்கிறது. இதனால் இந்தியா மற்றும் உலகநாடுகளில் சம்பாதிக்கப்படும் பணத்தை பல விஷமகாரர்கள் தங்களின் புத்தியை பயன்படுத்தி வெளிநாடுகளில் குறப்பாக சுவிசர்லாந்து நாட்டின் வங்கி கிளைக்கு பறிமாற்றம் செய்யப்படுகிறது.
இதைக்கண்டு வெகுன்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சுவிசர்லாந்தில் இருக்கும் ஹெச்எஸ்பிசி வங்கி கிளைக்கு கண்டிக்கும் வகையில் ஒரு தனிப்பட்ட கடிதத்தை எழுதியுள்ளார்.
சிதம்பரம்
இக்கடிதத்தில் "நீங்கள் செய்யும் இந்த செயல் ஒரு நாட்டின் வளர்ச்சியை முற்றிலும் சீர்குலைக்கும். இத்தகைய கருப்பு பணத்தினால் இந்திய நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வரி பணம் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை களையும் வகையில் உங்கள் வங்கி கிளைகளில் இருக்கும் இந்தியர்களின் வங்கி கணக்கின் முழுவிபரத்தை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறன்" என குறிப்பிட்டு இருந்தார். (இவருக்கும் இவர்களின் கூட்டாளிகளுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை..)
சுவிஸ் நிதியமைச்சர்
இந்திய அரசு சுவிஸ் நாட்டு வங்கி செயல்பாடுகளின் சட்டதிட்டதில் உள்ள ஒட்டைகளை பற்றி கடந்த நான்கு மாதமாக இந்தியா உலகஅமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இதனை மேலும் தீவிரப்படுத்த போவதாக சிதம்பரம் சுவிஸ் நாட்டின் நிதியமைச்சர் எவிலின் விட்மெர்-க்கு எழுதிய கடிதத்தில் தெரவித்தார்.
சுவிஸ் வங்கித்துறை
இந்தியா மற்றும் சில நாடுகள், சுவிஸ் வங்கிகளை பல வழிகளில் கேட்டுகொண்டும் இந்த வங்கிகள், கருப்பு வைத்திகருக்கும் வங்கி கணக்குகளை பற்றி எந்த விதமான தகவல்களும் தெரிவிக்கவில்லை.
தகவல்களை பகிர ஒப்புதல்
உலக நாடுகள் கேட்டுக் கொண்டமையால் சுவிஸ் வங்கித்துறை தனது வங்கி செயல்பாட்டு திட்டங்களில் சில முக்கிய மாற்றஙகளை செய்தது. இதனால் சில முக்கிய தகவல்களை தர சட்டம் இடம் அளித்துள்ளதாக சுவிஸ் வங்கித்துறை தெரிவித்துள்ளது.
ஹெச்எஸ்பிசி வங்கி
சுவிஸ் நாட்டில் அதிகளவில் இந்தியர்கள் கணக்கு வைகத்திருக்கும் வங்கிளில் ஹெச்எஸ்பிசி வங்கியும் ஒன்று. இந்த வங்கி பிரான்ஸ் நாட்டுடன் செய்த இரட்டை வழி ஒப்பந்தத்தால் பிரான்ஸ் நாட்டின் கிளைகள் விபரங்களை அளித்தது. ஆனால் சுவஸ் வங்கிக்கிளைகள் இன்னும் தகவல்களை அளிக்க மறுத்து வருகிறது.