இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் மின்பற்றாக்குறை குறைக்கவும் உலக வங்கி அடுத்த 5 வருடத்தில் 12 பில்லியன் டாலர் வரை நிதியுதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த ஒரு வாரத்தில் ஒரு பில்லியன் டாலரை பாகிஸ்தான் நிதி அமைச்சகத்திற்கு அனுப்ப உலக வங்கி முடிவு செய்யதுள்ளது, இந்த நிதிக்கு 2 சதவீதம் வட்டி விதிக்கப்படும். அடுத்த 5 வருடத்தில் மிதமுள்ள தொகையை அனுப்பவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நிதியுதவி
இந்த நிதியை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், தீவரவாதத்தை ஒழித்தல், மின்பற்றாக்குறையை குறைத்தல் மற்றும் கல்வித்துறையில் வளர்ச்சியை உக்குவிக்கவும் பாகிஸ்தான் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின் பிரச்சனை
நாட்டில் நிலவும் பிரச்சனையை சமாலிக்க இந்த நிதி மிகவும் உதவுகரமாக இருக்கும், மின்தடையினால் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வெயில் காலம் துவங்கிவிட்ட நிலையில், வெப்பம் 45 டிகிரைவரை எட்டும், இதனால் இக்காலகட்டத்தில் மின்தடை அறவே இருக்க கூடாது.
தீவரவாதம்
தெற்காசிய பகுதியில் சுமார் 180 மில்லியன் மக்களின் பொருளாதார நிலை தீவிரவாத இயக்கமான அல்கொய்தா இயக்கத்தால் பெரும் அளவில் பாதித்துள்ளது. மேலும் இதனால் வரி ஏய்ப்பு மற்றும் மின் பற்றாக்குற போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
கடந்த வருடம் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பாகில்தானிற்கு 6.7 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைத்துள்ளது.