சான் பிரான்சிஸ்கோ: தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் 10 வருடங்களுக்கு பிறகு ஒரு நிறுவனத்தை கைபற்றியுள்ளது. இது ஆப்பிள் நிறுவன வரலாற்றில் முக்கியமான பகுதியாகும்.
இசை உலகில் கலக்கும், இசை வெளியீடு மற்றும் ஹெட்போன் நிறுவனமான பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் அதிகப்படியான தொகைக்கு வாங்க போவதாக இச்செய்தியை பற்றி நன்கு அறிந்த இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தானர்.
ஆப்பிள் - பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ்
இரு நிறுவனங்களும் நிறுவன கையகப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில் இறங்கியுள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் ஐபாட்கள் மிகவும் சிறப்பான தொழில்நுட்பத்துடன் இருக்கும், ஆனால் ஹெட்போன் மற்றும் இயர்போன்கள் மட்டும் சாதாரண வடிவிலே இருக்கும். ஆனால் அதிலும் தொழில்நுடபத்தை குறை சொல்லமுடியாது. இந்த நிலையை போக்க ஆப்பிள் விதிவிதமான ஹெட்போன்களை மார்கெட்டில் விற்பனை இந்நிறுவன கையகப்படுத்துதல் சரியான தேர்வாக இருக்கும்.
ஐ-ரேடியோ
ஆப்பிள் நிறுவனம் விளம்பரத்தின் மூலம் வருவாய் ஈட்ட, ஆப்பிளின் வாடிக்கையாளருக்கு ஐ-ரேடியோ என்னும் ஒரு இசை சேவையை 2013ஆம் ஆண்டு துவங்கியது. இந்த திட்டத்தை பேன்டோரா இன்க் நிறுவனத்துடன் இணைந்தது துவங்கியது இப்போது இவ்விரு நிறுவனங்களும் பிரிந்தது. பேன்டோரா இன்க் நிறுவனத்தின் இடத்தை நிரப்ப பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் சரியாக இருக்கும் என இந்நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ்
பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் நிறுவனத்தை டாக்டர். டீரி என்னும் ஒரு ராப்பர் மற்றும் இசை தயாரிப்பாளாரன ஜிம்மி ஐஒவைன் இணைந்து துவங்கினர். ஸ்கல்கேன்டி இன்க், சென்ஹெய்சர் எல்க்டிராணிக்ஸ் மற்றும் போஸ் கார்ப் நிறுவனத்தை போல இந்நிறுவனத்திறக்கு கடும் போட்டியை கொடுத்தது.
நிறுவன மதிப்பு
கடந்த வருட முதலீட்டு சுற்றில் பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலர் என மதிப்பிடபட்டது. ஆனால் மார்ச் மாத நிலவரப்படி ஆப்பிள் நிறுவன கணக்கில் 130 பில்லியன் டாலர் உள்ளது. இதனால் இந்நிறுவனத்தை வாங்குவது மிகவும் சுலபமான விஷயம்.
அதிகப்படியான நிதி
ஆப்பிள் நிறுவனம் அதிகப்படியான பங்கு இருப்பை விற்றதால் தனது வங்கி கணக்கில் 130 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை சேர்த்துள்ளது.