30 வர்த்தக கணக்குகளை முடக்கிய செபி!! தேர்தல் முடிவுகளின் எதிரொலி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிட்ட கடந்த வெள்ளிக்கிழமை எதிர்பாராத விதிமாக 30 பங்குசந்தை இடைதரகர்களின் கணக்கில் இருந்து அதிகப்படியான பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதனை கண்காணித்த சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இக்கணக்குகளில் உரிமையாளர்களை விசாரனை செய்ய முடிவு செய்ய உள்ளது.

முதலில் இக்கணக்கு உரிமையாளர்களை செபியின் வர்த்தக வதிமுறைகளுக்கு முரன்பாடாக செயல்பட்டுள்னரான என்ற விதத்தில் வசிரிக்கப்படுவதாக செபி தெரிவித்துள்ளது. மேலும் கணக்குள் குறித்த முழுமையான தகவல்களை பெற செபி முடிவு செய்துள்ளது.

உச்சத்திலும் உச்சம்

உச்சத்திலும் உச்சம்

வெள்ளிக்கிழமை மட்டும் மும்பை பங்கு சந்தையில் 1,487 புள்ளிகள் உயர்ந்து 25,000 புள்ளிகள் என்ற மிகப்பெரிய இலக்கை தவிடுபொடியாக்கியது. மேலும் இவ்வர்த்தக நாளின் முடிவில் சற்று சரிந்தது. மேலும் சந்தையின் 30 ப்ளு சிப் பங்குகளில் வர்த்தகத்தில் இருந்து 750 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது.

செபி

செபி

இந்நாளில் செபி இரண்டு குழுவாக பிரிந்து செயல்பட்டது. ஒரு குழு பங்கு சந்தையின் செயல்பாட்டை கவனித்தது, மற்றொரு குழு தேர்தல் முடிவுகளை கவணித்தது. இதனால் தேர்தல் முடிவுகளால் பங்கு சந்தை பாதிப்பு அடைவதை துள்ளியமாக கவனிக்க முடிந்தது.

கருப்பு பணம்
 

கருப்பு பணம்

இத்தகைய கணக்குகள் மூலம் இந்திய மக்களின் கருப்பு பணம் அதிகளவில் சந்தையில் புழங்குவதாக தகவலும் கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை சந்தையில் உட்செலுத்தப்படும் என சந்தேகத்திற்குரிய 5,000 டீமேட் கணக்குகளை தேர்தல் பிரச்சாரம் துவங்கி சில நாட்களிலே முடக்கியது செபி.

5 நாள் கூத்து

5 நாள் கூத்து

எக்ஸைட் போலின் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக வந்ததை அடுத்து பங்குசந்தையில் பாட்டாசு வெடிக்க துவங்கியது. கடந்த 5 நாட்களில் சுமார் 1560 புள்ளிகள் வரை உயர்ந்தது.

அவசர கால திட்டம்

அவசர கால திட்டம்

மேலும் தேர்தல் முடிவுகல் சந்தையை கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்ட செபி மற்றும் ஆர்பிஐ சந்தையின் நிலையற்ற தன்மையை குறைக்க பல அவசர கால திட்டங்களை வகுத்து இருந்தது. இத்தகைய திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டதாக செபி தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

30 entities under Sebi's lens for unusual trading on May 16

The Securities and Exchange Board of India (Sebi) has initiated inquiry against more than 30 brokers and high net worth individuals for unusual stock market transactions undertaken on Friday, the day the Lok Sabha election results were declared.
Story first published: Monday, May 19, 2014, 16:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X