பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்தில் தீடிர் திருப்பம், இன்றைய நாள் முதல் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ நிர்வாக குழுவில் அல்லாதவர் என்றே நிர்வாக குழு முடிவு செய்திருந்தது. ஆனால் நிறுவன ஊழியர்கள் பொருத்தவரை நந்தன் நிலகேனி தான் சரியான தேர்வாக இருக்கும் என கருத்து தெரவித்து வருகின்றனர். இதனால் புதிய சிஇஓ-வை தேர்ந்தெடுக்கும் குழு குழப்பத்தில் உள்ளது.
தேர்தல் முடிவிற்கு முன் நிறுவன ஊழியர்கள் இந்நிறுவனத்தின் புதிய சிஇஓ பதவிக்கு பி.ஜி.ஸ்ரீனிவாஸ் பெயர் கோஷமிட்டு வந்தனர், ஆனால் தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி, ஹிரோவாக இருந்து ஜிரோவானது, இதனால் நந்தன் நிலகேனிக்கு அரசியல் வாய்ப்பு கிடைக்கவில்லை. நந்தன் பொங்ளூரு பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு சார்பாக போட்டியிட்டு தோற்றார்.
இன்போசிஸ் ஊழியர்கள்
நந்தன் நிலகேனி 16வது நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதையடுத்து, இன்போசிஸ் நிறுவனத்தின் கீழ் மற்றும் நடு நிலை ஊழியர்கள் (இவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்) புதிய சீஇஓவாக நந்தன் பெயரை கோஷமிட்டு வருகின்றனர். மேலும் துவண்டு போன நிறுவனத்தை நிலைநிறுத்த நந்தன் சரியான தேர்வு என சில உயர் மட்ட அதிகாரிதளும் தெரிவித்து வருகின்றனர்.
பாசிடிவ் வைப்ரேஷன்
மேலும் "நந்தன் இன்போசிஸ் நிறுவனத்திற்கு திரும்பவும் வருவது சாத்தியமே" என்று பங்குசந்தை முதலீட்டு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் இவரின் வருகை நிறுவனத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். ஆனால் இதுகுறித்து நந்தன் எந்த விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இன்போசிஸ் நிலைமை
தற்போது இருக்கும் சூழலில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்திற்கு வலிமைவாய்ந்த ஒரு ஆள் தேவை. இவரின் செயல்பாட்டை பொருத்தே இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த 10 வருட வளர்ச்சி அமைந்திருக்கும்.
ஆதார்
தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டின் திட்டத்தின் தலைவர் நந்தன் நிலகேனி தான். இவர் இந்த முயற்சி முகவும் சிற்ப்பானது. ஆனால் சில தடைகளால் இத்திட்டதின் மதிப்பு முற்றிலும் சரிந்தது.
பணி ஓய்வுகாலம்
இன்போசிஸ் நிறுவனத்தை பொருத்த வரை பணி ஓய்வுகாலம் என்பது 60 வயதாகும். இதனால் நந்தன் இன்னும் 2 ஆண்டுகளுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றலாம். மேலும் பணி ஓய்வுகாலத்தை நீட்டிக்கும் வகையில் சில பரிந்துரைகளை செய்ய முடியும் என இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.