பெங்களூரு: அமேசான் நிறுவனத்துடன் கடுமையாக போட்டி போடும் பிளிப்கார்ட் நிறுவனம், இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தக சந்தையில், ஆடை விற்பனையில் கொடிகட்டி பறக்கும் மிந்திரா நிறுவனத்தை 300 மில்லியன் டாலருக்கு கைபற்றியதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த வெற்றி கலைப்பில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த டார்கெட் அலிபாபா தான் என பின்னி தெரிவித்தார். அது என்ன அலிபாபா??
அலிபாபா
அலிபாபா என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். சில்லறை வர்த்தகத்தில் உலகளவில் வெற்றிக்கொடியை நாட்டிய நிறுவனம் அலிபாபா. இந்நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
சச்சின் மற்றும் பின்னி பன்சால்
2008ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தில் உயரிய பதவியில் இருந்து விலகி இந்தியாவிற்கு வந்த இரண்டு இளைஞர்களின் வெற்றி கதையே இந்த பிளிப்கார்ட். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அமேசான் நிறுவனத்தை போன்று இந்தியாவில் ஒரு நிறுவனத்தை துவங்கள நினைத்த இவர்கள் தற்போது அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ளனர்.
அமேசான்
மிந்திரா நிறுவனத்தை கைபற்றிய சச்சின் மற்றும் பின்னி பன்சால் கூறிகையில்,"அமேசான் நிறுவனத்தை போன்று வளர்வது எங்களது கனவு, தற்போது நாங்கள் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தை விட பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளோம். எங்களது அடுத்த டார்கெட் அலிபாபா நிறுவனத்தை போன்று உலகநாடுகளிலும் எங்களது கிளைகளை பறப்புவது தான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
சீன பயனம்
நாங்கள் சீனாவிற்கு வர்த்தக சார்ந்த பணிகளுக்காக பல முறை சென்றுள்ளோம். மக்கள், வருமானம், எண்ணங்கள் அனைத்திலும் இந்தியாவை ஒத்த நாடு சீனா, அலிபாபா போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு செல்கின்ற போது. பிளிப்கார்டும் உலக நாடுகளுக்கு விரைவில் பறக்கும் என சச்சின் பன்சால் தெரிவித்தார்.
பல நிறுவனங்கள்
மேலும் நாங்கள் பேக்-எண்ட், ஆட்டோமேஷன் மற்றும் சப்ளை செயின் துறைகளை சார்ந்த நிறுவனங்களை கையகபடுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மேலும் சிறப்பாக வளர எதுவாக இருக்கும்.