டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டில் 49 சதவீதத்தைத் தாண்டுவதற்கே அன்னிய முதலீட்டு முன்னேற்றக் கழகம் (FIPB) மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை கமிட்டி (CCS) ஆகியவற்றின் அனுமதி தேவை.
எதிர்ப்பு
முந்தைய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே. ஆண்டனி மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தார். ஆனால் தற்போதைய மத்திய அரசில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தான் பாதுகாப்புத் துறையையும் கவனித்து வருகிறார். அதனால் இத்துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்த எந்தத் தடையும் இல்லை.
100% முதலீடு
பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை 100 சதவீதம் உயர்த்துவது சாத்தியமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என்ன நடக்கும்??
இத்தகைய முதலீட்டின் மூலம் ஒரு வெளிநாட்டுக் நிறுவனம் இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்களைத் தயார் செய்தால், அவற்றை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
பங்கு சந்தை
இருப்பினும், இந்த அனுமதி பாதுகாப்புத் துறைக்கு ஒரு பாஸிட்டிவ்வான ஒரு வளர்ச்சிதான் என்று கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் 'பிஇஎல்' (BEL) மற்றும் 'பிஇஎம்எல்' (BEML) ஆகிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகள் உயரத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.